சித்தனாத் பாபா என்பவர் இங்கிருக்கும் நீர்வீழ்ச்சியின் அருகே தியானம் செய்து வந்தார். ஆகையால் இந்த நீர்வீழ்ச்சிக்கு சித்தனாதர் கி தாரி என்று பெயர்வந்தது. அழகிய நீர்வீழ்ச்சிக்களைக் கொண்டிருப்பதால் உள்ளூர்வாசிகளுக்கும், சுற்றுலாப்பயணிகளுக்கும் சிறந்த பொழுது போக்குத் தலமாக இருக்கிறது.
மேலும், இங்குள்ள பாறைகளில் இருக்கும் ஓவியங்களையும், சிற்பங்களையும் காண்பதற்கென்றே வரும் ஆராய்ச்சியாளர்கள் பலர். சித்தனாதரின் சமாதி நீர்வீழ்ச்சியின் அருகில் அமைந்திருக்கிறது.