ஆவோ மக்ககளின் பழமையான மற்றும் பாரம்பரியமான கிராமங்களில் ஒன்றாக மோகோக்சுங்கிற்கு, இதே மாவட்டத்தில் உள்ள முதல் ஆவோ கிராமமான உன்ங்மாவிலிருந்து ஆவோ மக்கள் இடம் பெயர்ந்து வந்தனர்.
மோகோக்சங் என்ற இந்த பெயர் மோகோக் மற்றும் சங் என்று இரண்டு வார்த்தைகளால் உருவானது. மோகோக் என்றால் 'விருப்பமில்லாமல்' என்றும், சங் என்றால் 'மக்கள் கூட்டம்' என்றும் அர்த்தமாகும்.
எனவே மோகோக்சங் என்றால் விருப்பமில்லாமல் மக்கள் கூட்டமாக தங்களுடைய பூர்வீக இடத்தை விட்டு வந்தவர்கள் என்று பொருளாகும். நாகாலாந்தின் பிற பழங்குடியினரைப் போலவே மோகோக்சங்கின் திருவிழாக்களும் விவசாயம் மற்றும் இயற்கை சார்ந்ததாகவே உள்ளன.
மோவோட்சு பண்டிகை இந்த பூமியை உருவாக்கியவரின் அருளை விவசாய அறுவடைக்கு பெறுவதன் பொருட்டாக நடத்தப்பட்டு வருகிறது. ஆகஸ்டு மாதத்தின் முதல் வாரத்தில் நடத்தப்படும் ட்சுங்ரெமோங் திருவிழாவும் அறுவடைக் காலத்தின் திருவிழாவாகும்.
எனினும், மதமாற்றம் காரணமாக கிறித்தவ மதம் தான் முக்கியமான திருவிழாவாக உள்ளது. மோகோக்சங் நகரத்திலிருந்து மோகோக்சங் கிராமத்திற்கு எளிதில் வாகனங்களில் வந்து செல்ல முடியும்.