ஒரு கம்பீரமான ஆலயமாக பிரசித்தி பெற்றுள்ள இந்த ராம்பாக் தாம் ஒரு அமைதியான சூழலில் கைத்தல் கிராமத்துக்கு அருகில் ராம்பாக் சாலையில் அமைந்திருக்கிறது. பார்வதி தேவியின் ஒன்பது அவதாரங்களான நவக்கிரக நாயகிகளுக்காக இந்த கோயில் எழுப்பப்பட்டிருக்கிறது.
இந்த கோயிலின் கருவறையில் துர்க்கா மற்றும் இதர எட்டு தேவிகளின் சிலைகளைக்காணலாம். ஹனுமான் ஜி, ஜவாலா ஜி மற்றும் ராதா கிருஷ்ணன் ஆகிய தெய்வங்களுக்கும் தனி சன்னதிகள் உள்ளன.
பிரதான வாயிலுக்கு மேலே ராம் தர்பார் சித்திரக்காட்சி பொறிக்கப்பட்டிருக்கிறது. இது தீய சக்திகளிடமிருந்து இந்த கோயிலை காப்பதாக சொல்லப்படுகிறது. இந்த கோயிலுக்கு வேறு எந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கோயில் நவராத்திரி திருநாள் மற்றும் நவதுர்க்கா திருவிழாக்களின்போது ஒரு ஆன்மீக கேந்திரமாக மாறிவிடுகிறது. இசை மற்றும் நடனம் போன்ற கலை நிகழ்ச்சிகள் அச்சமயம் இந்த கோயிலில் ஏற்பாடு செய்யப்படுகின்றன.