இங்கிலாந்து நாட்டின் ராணியான விக்டோரியா உருது மொழியின் பேரில் ஆர்வம் கொண்டவராய் இருந்தார். அவர் இந்தியாவிலிருந்து முன்ஷி மஜார் அலி எனும் ஆசிரியரை இங்கிலாந்திற்கு வரவழைத்து உருது மற்றும் பாரசீக மொழிகளை கற்றுக்கொண்டார்.
பின்னர் இந்த முன்ஷியை கௌரவிக்கும் விதமாக ராணி அவருக்கு ஒரு மாளிகையை மண்டாவர் எனும் இடத்தில் கட்டித்தந்துள்ளார். அதுவே இன்று மண்டாவர் கா மஹால் என்று அழைக்கப்படுகிறது.
1850ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த மாளிகை கல்கா தேவி கோயில் எனும் பிரசித்தமான கோயிலிலிருந்து 8 கி.மீ தூரத்தில் உள்ளது. அக்கோயிலானது மண்டாவர் – ப்லாவாலி சாலையில் குந்தன்பூர் கிராமத்திற்கு அருகே அமைந்திருக்கிறது.
இந்த கோயிலுக்கு வழிபடுவதற்காக வந்தபோதுதான் ருக்மணியை கிருஷ்ணர் கவர்ந்து சென்றதாக சொல்லப்படுகிறது. மண்டாவர் கா மஹால் மாளிகையை காண வரும் பயணிகள் இந்த கல்கா தேவி கோயிலுக்கும் தவறாது விஜயம் செய்கின்றனர்.