உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொராதாபாத் பகுதியில் நஜபாபாத் எனும் இடத்தில் இந்த நஜிபுதௌலா கோட்டை அமைந்திருக்கிறது. முகலாயர்களின் வீழ்ச்சிக்கு பின்னர் இது நஜிபுதௌலா என்றழைக்கப்பட்ட குலாம் காதிர் என்பவரால் கட்டப்பட்டிருக்கிறது.
சுல்தானா தாக்கூ என்ற பெயராலும் அறியப்பட்ட குலாம் காதிர் என்பவர் ஒரு கொள்ளைக்காரர் ஆவார். ஆங்கிலேய காவற்படைகளிலிருந்து தப்பித்து அவர் இந்த கோட்டையில் ஒளிந்து வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது.
இன்று நல்ல நிலையில் உள்ள இந்த கோட்டை ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாக பயணிகளிடையே பிரபல்யமடைந்துள்ளது.