மௌண்ட் அபு மலைவாசஸ்தலத்திலுள்ள ஒரு குன்றின் உச்சியில் அமைந்திருக்கும் இந்த ரிஷிகேஷ் கோயில் ஒரு புராதனமான கோயிலாகும். இது 700 வருடங்களுக்கு முன்பு அம்ரிஷ் எனும் மன்னரால் கட்டப்பட்டுள்ளது.
இவர் மௌண்ட் அபு பிரதேசத்தில் அமராவதி எனும் ஆட்சி வம்சத்தை நிறுவியவராவார். அம்ரிஷ் மன்னரின் குலதெய்வமான ‘ரிஷிகேஷ்’ கடவுளுக்காக இக்கோயில் உருவாக்கப்பட்டுள்ளது.
புராண நம்பிக்கைகளின்படி, அம்ரிஷ் மன்னர் 100 அஸ்வமேதயாகங்களை வெற்றிகரமாக செய்து முடித்ததாகவும், அதனால் கோபமடைந்த இந்திரக்கடவுளின் தாக்குதலிலிருந்து அம்ரீஷ் மன்னரை ரிஷிகேஷ் கடவுள் காப்பாற்றியதாகவும் நம்பப்படுகிறது.