ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள சிரோஹி மாவட்டத்தின் தலைநகரம் இந்த சிரோஹி நகரம் ஆகும். ஆரம்ப காலத்தில் இது சிரோஹி சமஸ்தானத்தின் தலைநகரமாகவும் திகழ்ந்திருக்கிறது.
ராவ் சோபாஜி’யின் மகனான சேஹாஸ்த்ரமால் என்பவரால் கட்டப்பட்டுள்ள ஒரு கோட்டையை சுற்றி இந்த சிரோஹி நகரம் உருவாக்கப்பட்டுள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 321 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
சிரோஹி நகரத்தில் சிரோஹி கோட்டை, பனஸ் அணை, மர்குண்டேஷ்வர் மஹாதேவ் மந்திர், கம்பேஷ்வர் மஹாதேவ் மந்திர், சர்னேஷ்வர் மஹாதேவ் மந்திர் மற்றும் கேசார் வில்லா பேலஸ் போன்ற முக்கியமான சுற்றுலா அம்சங்கள் நிறைந்துள்ளன.