1972 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட தெப்பக்காடு யானை முகாம், நிலத்தில் வாழும் மிகப்பெரிய உயிரினத்தை கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் பார்வையாளர்கள் காண உதவுகின்றது. இந்த வளாகத்தின் உள்ளே தினந்தோறும் ஒரு ஜோடி யானைகள் விநாயகருக்கு பூஜை செய்கின்றன.
காலையிலும், மாலையிலும் தெப்பக்காடு யானை முகாமில் யானை சவாரிகள் அனுமதிக்கப்படுகின்றன. மாலை நேரங்களில் யானைகள் உணவு அருந்தும் நேரத்தில் அவற்றை பார்வையிட பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றார்கள்.
ஆண்டுதோறும் லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் இங்கு வருகிறார்கள். இந்த தடித்த உயிரினத்தை குறித்த கல்வியை பரப்புவதற்கு இது ஒரு கல்வி நிலையமாகவே செயல்படுகின்றது.
சுற்றுப்புறம் சார்ந்த சுற்றுலாவுக்கும், சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும், மனித-யானை பகைகளை தீர்த்துக்கொள்ளவும், அந்த மிருகத்தை குறித்த அறிவை வளர்த்துக்கொள்ளவும் இந்த தெப்பக்காடு யானை முகாம் உதவுகின்றது.
பார்வை நேரம் : காலை 5:30 - மாலை 6:00
நுழைவு கட்டணம் : ரூ.20