இந்த அழகிய ஆலயம் முக்தேஸ்வர் பகுதியில் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. இந்த ஆலயம் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது.
'முக்தேஸ்வர் தாம்' என்று அழைக்கப்படும் இந்த ஆலயம் 350 ஆண்டுகள் நீண்ட வரலாற்றைக் கொண்டிருக்கிறது. இந்த ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு சிவபெருமான் தனது அளவு கடந்த ஆசீர்வாதங்களை வழங்கி வருகிறார்.
முக்தேஸ்வர் ஆலயத்தில் வெள்ளை மார்பிள் கற்களால் செய்யப்பட்ட ஒரு அழகிய சிவலிங்கம் வைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு கீழ் இருக்கும் யோனி தாமிரத்தால் செய்யப்பட்டிருக்கிறது.
இந்த சிவலிங்கத்தைச் சுற்றி, இந்து சமயக் கடவுள்களான விஷ்ணு, பிரம்மன், பார்வதி, கணேசன், அனுமான் மற்றும் நந்தி ஆகியோரின் சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. செங்குத்தான மலையில் அமைக்கப்பட்டிருக்கும் படிகளில் ஏறி இந்த ஆலயத்தை அடையலாம்.