பெயோரா என்பது ஒரு இயற்கை சுற்றுலாத் தலமாகும். இந்த பெயோரா முக்தேஸ்வரிலிருந்து 8 கிமீ தொலைவில் கோசியாகுடோலி என்ற தாலுகாவில் அமைந்திருக்கிறது.
இந்த தலம் கடல் மட்டத்திலிருந்து 6600 அடி உயரத்தில் அமைந்துள்ளது. பெயோரா உத்தரகண்ட் மாநிலத்தின் பழக்கிண்ணம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பகுதியில் இருந்து இமயமலையின் இயற்கை எழில் கொஞ்சும் அழகினைக் பரிபூரணமாக கண்டு ரசிக்கலாம்.
பெயோரா பகுதி பசுமையான சால், பைன், ஓக், புரூன், கபால் மற்றும் ரோடோடென்ட்ரோன் மரங்களால் சூழப்பட்டிருக்கிறது. இந்த பகுதி ஒரு அடர்த்தியான காட்டுப் பகுதியாக இருப்பதால், இது சிறுத்தைகள், காட்டுப் பூனைகள், குரைக்கும் மான்கள் மற்றும் இந்திய கருப்புக் கரடிகளின் சரணாலயமாக விளங்கி வருகிறது.
மேலும் இங்கிருக்கும் நீரூற்றில் ஏராளமான சத்துக்களும் தாதுக்களும் நிரம்பியிருக்கின்றன. சுற்றுலாப் பயணிகள் இங்கிருக்கும் அழகிய பறவைகள் மற்றும் இங்கு நடைபெறும் பனிச்சறுக்கு போட்டிகள் ஆகியவற்றைக் கண்டு ரசிக்கலாம்.