மேற்கு வங்கத்தின் பீஹார் எல்லையில் அமைந்துள்ள இக்கிராமத்தில் இருக்கும் முகுத்மணிபூர் அணை இந்தியாவின் மிகப்பெரிய நீர்த்தேக்கமாகும். 1950களில் கட்டபட்ட இந்த அணை ஏறத்தாழ 8000 சதுர கீமீ பரப்பளவில் அமைந்துள்ளது.
புகழ்பெற்ற பூமி அணை
முகுத்மணிபூர் சுற்றுலா இந்த அணையை மையப்படுத்தியே அமைந்துள்ளது. இயற்கை காட்சிகளை அள்ளித் தருவதால் ஏராளமான பயணிகள் இங்கே குவிகிறார்கள். உள்ளூர் பெங்காளி உணவுகளுக்காகவும் முகுத்மணிபூர் புகழ்பெற்று விளங்குகிறது.
எங்கே தங்குவது?
குறிப்பிடத்தக்க இரண்டு அரசு தங்கும் விடுதிகள் இருந்தாலும் ஏராளமான விடுதிகளும், உணவகங்களும் இங்கே உள்ளன. உள்ளூர் போக்குவரத்திற்காக பயணிகள் உள்ளூர் ஆட்டோ ரிக்ஷாக்களை பயன்படுத்தலாம்.
அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்
அணையில் இருந்து 2கிமீ தொலைவில் உள்ள பாங்கோபால்பூர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகளும், பறவை இனங்களும் உள்ளன.
வருடத்திற்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் வருகை தருகிறார்கள். முகுத்மணிப்பூர் அணை இயற்கை காட்சிகளை அள்ளித் தருவதால் ஏராளமான பயணிகள் இங்கே குவிகிறார்கள்.