கராக்பூரின் இரு மலைமுகடுகளுக்கு இடையில் சீதா கந்த்திலிருந்து சுமார் 6 மைல் தொலைவில் அமைந்துள்ள ரிஷிகந்த் ஒரு வெந்நீர் ஊற்றாகும். இந்த இடத்தில் காணப்படும் நீர்த்தேக்கமானது இப்பகுதி மக்களின் நீராதாரமாகத் திகழ்கிறது.
இவ்விரு மலை முகடுகளுள் ஒன்றின் மேற்குப்புறத்தின் அடிப்பகுதியிலிருந்து மேலெழும்பி வரும் நீர்க்குமிழிகளைக் காணலாம். இந்த நீர்க்குமிழிகள் நுண்ணிய பள்ளங்களின் இடைவெளிகளிலிருந்து வெளிப்படும் வாயுவினால் உருவாகின்றன.