மிர்ஸா சஃபி என்று முன்னர் அழைக்கப்பட்டு வந்த சயீஃப் கானின் மனைவியான மால்கா பானு, தாஜ்மஹாலை தன் நினைவகமாகக் கொண்டுள்ள மும்தாஜ் மஹாலின் மூத்த சகோதரி ஆவார்.
சயீஃப் கான் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிர்மாணிப்பதற்கான பணிகளை மேற்கொண்டவராவார். இவர் ஜமால்பூர் மற்றும் சஃபியாஸரா ஆகியவற்றில் கட்டப்பட்ட நகரியங்களுக்காக பெரிதும் மதிக்கப்பட்டார். இங்குள்ள மிகப்பெரிய கிணறு சயீஃப் கானுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும்.