தத்தாத்ரேய கடவுளுக்காக ஒரு மலை மீது எழுப்பப்பட்டுள்ளது இந்த தத்தாத்ரேயர் கோயில். முருட் பகுதியில் உள்ள இந்த கோயிலில் பிரம்மா, விஷ்ணு மற்றும் மஹேஸ்வரன் ஆகிய மூன்று தலைகளுடன் காட்சியளிக்கும் தத்தாத்ரேயர் சிலை காணப்படுகிறது.
இந்த கோயில் ஸ்வாமி ப்ரமேந்திரா என்பவரால் கட்டப்பட்டுள்ளது. அவர் இங்குள்ள பள்ளத்தாக்கில் புனிதப்பாதுகைகளை கண்டறிந்ததாக ஐதிகமாக நம்பப்படுகிறது. இக்கோயிலில் வைக்கப்பட்டுள்ள இந்தப்பாதுகைகள் பக்தர்கள் வணங்கும் ஒரு புனிதமாக உள்ளது.