முததிக்கு அருகே உள்ள காவேரி வனவிலங்கு சரணாலயம் பயணிகள் கண்டிப்பாக பர்ர்க்க வேண்டிய இடம். இது ஜனவரி 14, 1987-ஆம் ஆண்டு விலங்குகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.
நூறு கிலோமீட்டர் பரப்பளவில் பறந்து விரிந்து கிடக்கும் இந்த சரணாலயம் பல்வேறு விலங்குகளுக்கு வாழ்விடமாக இருந்து வருகிறது.
இங்கு சாம்பார் மான்கள், காட்டெருமைகள், ராட்சஸ அணில்கள், புள்ளிமான்கள், சிறுத்தை, காட்டு நாய்கள், கரடிகள் போன்ற மிருகங்கள் பல ஆண்டுகளாக வசித்து வருபவை.
அதோடு இங்கு எண்ணற்ற பறவை இனங்களையும் பயணிகள் கண்டு ரசிக்கலாம். அதிலும் முக்கியமாக, சிர்க்கீர் குயில்கள், வேண்புருவ புல்புல்கள், சின்ன மரங்கொத்தி, பச்சை அலகு கொண்ட மல்கோஹா போன்ற பறவைகளை நீங்கள் வேறு எங்கும் பார்ப்பது அரிது.
இதை தவிர ஆமைகள், சதுப்பு நில முதலைகள், பாம்புகள் போன்ற ஊர்வன வகைகளையும் இங்கு காணலாம்.காவேரி வனவிலங்கு சரணாலயத்திற்கு சுற்றுலா வர நவம்பர் மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்கள் சிறப்பானதாக இருக்கும்.
இங்கு வரும் பயணிகள் வனவிலங்கு சரணாலயத்தின் சரிவுகளில் நெடுந்தூர பயணம் செய்தும், சீறிப்பாய்ந்து ஓடும் காவிரியில் கட்டுமரப் பயணம் செய்தும் பொழுதை இன்பமயமாக களிக்கலாம். அதோடு மீன்பிடிக்கும் ஆர்வமுள்ளவர்களுக்கும் இது ஏற்ற இடமாக அமையும்.