மைசூர் நகரத்தில் உள்ள தொன்மை வாய்ந்த கட்டிடங்களில் ஒன்று ஜயலட்சுமி விலாஸ் மேன்ஷனாகும். இந்த மாளிகை குக்கரஹள்ளி ஏரியின் மேற்குப்பகுதியில் ஒரு சிறு குன்றின் மீது அமந்துள்ளது. மானசகங்கோத்ரி என்றழைக்கப்படும் பசுமை மிகுந்த மைசூர் பல்கலைக்கழக வளாகம் இந்த மாளிகையை சூழ்ந்து வனப்புடன் காணப்படுகிறது.
நான்காம் கிருஷ்ணராஜ உடையார் காலத்தில் 1905 ஆண்டு மஹாராஜா சாமராஜா உடையார் மகளான இளவரசி ஜயலட்சுமி அம்மணிக்காக இந்த மாளிகை கட்டப்பட்டுள்ளது. இது கட்டப்பட்ட காலத்தில் இந்த மாளிகையை கட்டுவதற்கு 7 லட்ச ரூபாய் செலவானது என்று கூறப்படுகிறது. 2002 ஆம் ஆண்டு 1.17 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. 2006 ம் ஆண்டு கர்நாடக கவர்னர் முன்னிலையில் இது மீண்டும் திறந்து வைக்கப்பட்டது.
ஆறு ஏக்கர் பரப்பளவில் பரந்து காணப்படும் இந்த புத்துருவாக்கம் செய்யப்பட்ட தொன்மையான மாளிகைக்கு இரு புறமும் வாயில்கள் உள்ளன. இந்த மாளிகையில் 300 ஜன்னல்களும் , 127 அறைகளும், 287 அலங்கார வேலைப்பாடு கொண்ட கதவுகளும் உள்ளன. இந்த மாளிகை மரம், இரும்பு, செங்கல் மற்றும் சுண்ணாம்பு குழம்பு ஆகியவற்றை கொண்டு கட்டப்பட்டுள்ளது