மைசூருக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக இந்த பிராந்திய அருங்காட்சியகத்தை பார்க்கும் படியாக அறிவுறுத்தப் படுகிறார்கள். சாமுண்டி மலையடிவாரத்தில் கரன் ஜி ஏரிக்கரையின் மீது இந்த மியூசியம் அமைந்துள்ளது.
1995ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் இயற்கை அன்னைக்கென்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம் தென்னிந்தியாவிற்கு சொந்தமான அற்புத மலர்கள், தாவரங்கள் மற்றும் அவற்றின் மகிமைகள், விலங்குகள் மற்றும் புவியியல் தாது பொக்கிஷங்கள் போன்றவை குறித்த தகவல்களை வழங்குகிறது என்பது குறிப்பிடத் தக்கது.இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இயற்கை சுற்றுச் சூழல், பிராணிகள் மற்றும் தாவரங்களிடையே உள்ள சமச்சீர் உறவு போன்ற இயற்கை சார்ந்த அறிவியல் உண்மைகளை மிக எளிமையாக தெரிந்து கொள்ளலாம்.
மேலும் இயற்கை சூழலியல், உயிரியல் பன்முகத்தன்மை, உயிரியல் பரிணாம வளர்ச்சி, இயற்கை பாதுகாப்பு போன்ற இயற்கை அறிவியல் சார்ந்த கருத்துகள் பற்றிய அறிவை இங்கு பெறலாம். கருத்து விளக்கத்துக்கு உதவும் மாதிரி படைப்புகள், கருவிகள், ஒலி-ஒளிபடப் படைப்புகள் போன்ற பல அம்சங்கள் இந்த மியூசியத்தில் இடம் பெற்றுள்ளன.
இந்த மியூசியத்தை பார்வையிடுவதற்கு பொது மக்கள் எந்த விதமான கட்டணமும் செலுத்த தேவையில்லை என்பது குறிப்பிடத் தக்கது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த மியூசியம் திறந்துள்ளது.