மைசூர் வரும் சுற்றுலா பயணிகள் செயிண்ட் பிலோமினா சர்ச் அல்லது செயிண்ட் ஜோசப் சர்ச் என்று அழைக்கப்படும் கிறித்துவ தேவாலயத்தையும் தவறாமல் பார்க்க பரிந்துரைக்கப் படுகின்றனர்.
இந்த கம்பீரமான தேவாலயம் 1933 ம் ஆண்டு மஹாராஜா மூன்றாம் கிருஷ்ணராஜ உடையாரால் கட்ட ஆரம்பிக்கப்பட்டு 1941ம் ஆண்டு முடிக்கப்பட்டது. ஐரோப்பிய காத்திக் கட்டிடக்கலை அம்சங்களை பின்பற்றி கட்டப்பட்டுள்ள இந்த தேவாலயத்தில் பலிபீட த்திற்கு கீழே அமைக்கப்பட்டுள்ள நிலவறை த்தளத்தில் 3ம் நூற்றாண்டை சேர்ந்த தெய்வீக பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த தேவாலயத்தின் தள வடிவமைப்பு புனித சிலுவையை மாதிரியாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. அதாவது சிலுவையை ஒத்த வடிவத்தினை கொண்ட இந்த தேவாலயத்தில் சிலுவையின் நெடுக்கில் செல்லும் தூணைக் குறிக்கும் பகுதி பக்தர்கள் கூடும் சபையாகவும் குறுக்காக செல்லும் சிலுவைப்பகுதியை குறிக்கும் பகுதியின் இரு பக்கத்திலும் ஒன்றில் பலிபீடமும் மற்றொன்றில் ஸ்தோத்திர இசைக் கூடமும் வருமாறு இந்த தேவாலயம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த தேவாலயத்தில் சுற்றுலாப்பயணிகள் செயிண்ட் பிலோமினா மற்றும் புனித யேசுவின் சிலைகளை கருவறையின் பளிங்கு பீடத்தில் காணலாம். இங்குள்ள ஜன்னல் கண்ணாடிகளில் கிறிஸ்துவின் பிறப்பு, சிலுவைத் தண்டனை, கடைசி விருந்து, உயிர்த்தெழுதல், முக்தியடைதல் போன்ற காட்சிகள் வண்ண ஓவியங்கள் மூலம் தீட்டப்பட்டுள்ளன.
இந்த தேவாலயத்தின் மற்றொரு சிறப்பம்சம் என்னவெனில் இங்கு 54 மீட்டர் உயரமுள்ள இரண்டு தூண் கோபுரங்கள் அமெரிக்காவில் நியூ யார்க் நகரிலுள்ள செயிண்ட் பாட்ரிக் சர்ச்சில் உள்ளது போன்றே அமைக்கப்பட்டுள்ளன.