சீக்கிய இனத்தாரின் 10 வது குருவுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்ரீ குருத்வாரா சாஹீப் நதௌன் பகுதியில் வசிக்கும் சீக்கிய மக்களின் முக்கியமான ஆன்மீகத்தலமாக பிரசித்தி பெற்றுள்ளது.
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குருத்வாரா பியாஸ் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்திலுள்ள அம்ரித்சர் குருத்வாரா நிர்வாகக்குழுவால் இந்த குருத்வாரா நிர்வகிக்கப்படுகிறது.
இந்த ஆன்மீகத்திருத்தலம் 10 வது குருவாகிய குரு கோபிந்த் சிங் முகாலயர்களை ஒரு போரில் வென்றபின் 8 நாட்கள ஓய்வெடுத்த ஸ்தலத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது.
முகலாய தளபதியான அல்ஃபா கான் ஹுசேன் என்பவரை 500 சீக்கிய வீரர்களை கொண்ட படையின் துணையுடன் கோபிந்த் சிங் வென்றதாக சொல்லப்படுகிறது. 1891ம் ஆண்டில் ஏப்ரல் 4ம் தேதி இந்த போர் நிகழ்ந்துள்ளது. தசம் கிரந்த் எனும் சீக்கிய புனித நூலில் இந்த போரைப்பற்றி ‘நதௌன் ஜங்’ எனும் தனி அத்தியாயத்தில் குரு கோபிந்த் சிங் எழுதியுள்ளார்.