நதௌன் பிரிட்ஜ் என்றழைக்கப்படும் இந்த பாலம் பியாஸ் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கிறது. இது தற்போது ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாகவும் அறியப்படுகிறது.
இந்த பாலத்திலிருந்து ஆற்றின் பின்னணியில் சூரிய அஸ்தமனத்தின் அழகை பார்த்து ரசிக்கலாம். இந்த பாலம் ஹாமிர்பூர் மாவட்டத்தையும் காங்க்ரா மாவட்டத்தையும் இணைக்கிறது.
இப்பகுதியில் சிறு படகுகளை இன்றும் போக்குவரத்து வசதிக்காக மக்கள் பயன்படுத்துகின்றனர். சுற்றுலாப்பயணிகளும் இந்த படகுகள் மூலம் ஆற்றில் பயணம் செய்து மகிழலாம்.