நிக்கோலாஸ் ரியோரிச் ஆர்ட் காலரி நக்கர் நகரத்தில் உள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாகும். நக்கர் கோட்டை வளாகத்தில் உள்ள இந்த பிரசித்தமான ஓவியக்கலைக்கூடத்தில் நிக்கோலாஸ் ரியோரிச் எனும் பிரசித்தமான ரஷிய ஓவியரின் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இவர் 1947ம் ஆண்டில் ரஷியாவில் நடந்த போல்ஷேவிக் புரட்சியின் போது நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவுக்கு வந்து வசித்துள்ளார். அவரது மகன் வரைந்த ஓவியங்களையும் இங்கு பார்க்கலாம். நக்கர் நகரத்திலிருந்து 2 கி.மீ தூரத்திலேயே உள்ள இந்த ஓவியக்காட்சி கூடத்துக்கு சுலபமாக சென்றடையலாம்.
ரியோரிச் வரைந்த ஓவியங்களில் ஹிமால மலைப்பகுதிகளின் ஒப்பிலாத தெய்வீக அழகு சித்தரிக்கப்பட்டிருக்கிறது. புகழ் பெற்ற ரஷிய ஓவியர்கள் மற்றும் பிரசித்தமான இந்தியத்தலைவர்களின் உருவப்படங்களும் கூட இங்கு இடம் பெற்றுள்ளன.
நிக்கோலாஸ் ரோலரிச் ஆர்ட் காலரி நிக்கோலாஸ் ரியோரிச் ஆர்ட் காலரி பார்வையாளர்களுக்காக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திறக்கப்படுகிறது. பயணிகளிடமிருந்து நுழைவுக்கட்டணமாக 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.