நக்கர் சுற்றுலாத்தலத்தில் உள்ள பிரபலமான சுற்றுலா அம்சமாக இந்த திரிபுர சுந்தரி கோயில் அமைந்துள்ளது. பகோடா பாணியில் உருவாக்கப்பட்டிருக்கும் இக்கோயில் மரக்கட்டுமானங்களுடன் மூன்று அடுக்குகளைக்கொண்டுள்ளது.
சாத்ரா எனப்படும் கூரை அமைப்பை பெற்றுள்ள இந்த கோயிலின் தோற்றமானது பல சிகரங்களை உள்ளடக்கிய குடை போன்று காட்சியளிக்கிறது. பல ஹிந்துக்கடவுள்கள் மற்றும் தேவியரின் உருவங்கள் மற்றும் சிலைகளை இந்த கோயிலில் பார்க்கலாம்.
விநாயகக்கடவுள், காக்கும் கடவுளான விஷ்ணு, ஆக்கும் கடவுளான பிரம்மா ஆகிய தெய்வங்களை இக்கோயிலில் தரிசிக்கலாம். இவை தவிர திரிபுர ராக்ஷசா சிலையையும் இங்கு பார்க்கலாம்.
நக்கர் பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே அமைந்துள்ளதால் இக்கோயிலுக்கு செல்வது எளிதாக உள்ளது. யஷோதாபால் என்ற மன்னரால் ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முன் இந்த கோயில் கட்டப்பட்டிருக்கிறது.
இருப்பினும் ஒரு நாட்டுப்புறக்கதையின்படி, ஒரு பெண் தெய்வம் சிலந்தி வடிவம் எடுத்து சிலந்தி வலைபோன்ற அமைப்பில் இந்த கோயிலை கட்டியதாக சொல்லப்படுகிறது.
மே மாதத்தின்போது ஷர்ஹி ஜாத்ரா பிரசித்தமான ரத உற்சவம் இந்த கோயிலில் கொண்டாடப்படுவதால் அச்சமயம் இக்கோயிலுக்கு விஜயம் செய்வது சிறந்தது.