நஹன் நகரத்தின் பனோடா சாஹிப் சாலையில் உள்ள தவ்லா குவான் ஒரு முதன்மையான சுற்றுலாத் தலமாகும். இந்த இடத்திலிருக்கும் நாரத்தை மற்றும் மாம்பழங்கள் மிகவும் புகழ் பெற்றவையாகும்.
இங்கிருக்கும் பழச்சாறு தொழிற்சாலையானது மேம்பட்ட தரத்தினாலான பழச்சாறுகள்;, ஊறுகாய்கள், ஜாம் மற்றும் பதப்படுத்தப்பட்ட பழங்களுக்காக புகழ் பெற்ற இடமாகும்.
இவற்றுடன் சேர்த்து, மிதவெப்ப மண்டல பகுதிகளின் பழங்களைப் பற்றி ஆராய்ச்சி நடத்தும் ஹிமாச்சல பிரதேச வேளாண்மை பல்கலைக் கழகமும் தவ்லா குவானில் உள்ளது. ராஜா ஜகத் சிங் என்பவர், ருலாம் காதிர் ரோஹில்லா என்பவருடன் போரிட்ட இடமான இந்த இடத்திற்கு அருகில் கடாசன் தேவி கோவிலும் உள்ளது.