த்ரிலோக்பூர், தர்மஷாலாவிலிருந்து 41 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும். மகா மாயா பாலசுந்தரி கோயிலை தரிசிக்க இவ்விடம் ஒரு வாய்ப்பை நமக்கு வழங்குகிறது.
குகைக் கோயில்கள் பலவற்றையும் இங்கு நாம் தரிசிக்கலாம். இந்த குகைக்கோயில்கள் இந்துக் கடவுளான சிவபெருமானுக்காக அர்பணிக்கப்பட்டுள்ளது. மார்ச் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் சுற்றுலாப் பயணிகள் இங்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர், ஏனெனில் இந்த நேரத்தில் தான் இங்கு புகழ்பெற்ற பொருட்காட்சி ஒன்று நடத்தப்படுகிறது.