ராஜ் பவன் எனப்படும் இந்த கவர்னர் மாளிகை காலனிய காலத்தை சேர்ந்த ஒரு பழமையான கட்டிடமாகும். இது உத்தரகண்ட் மாநில கவர்னரின் அதிகாரபூர்வ இருப்பிடமாக தற்போது பயன்படுத்தப்படுகிறது.
இதில் நன்கு அலங்கரிக்கப்பட்ட 113 அறைகள், ஒரு அழகிய பூங்காத்தோட்டம், நீச்சல் குளம் மற்றும் கோல்ப் மைதான வெளி ஆகியவை அடங்கியுள்ளன. பக்கிங்காம் அரண்மனைக்கு ஈடாக கருதப்படும் இந்த மாளிகையை பார்ப்பதற்கு முன் அனுமதி பெற வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.