நால்தேஹ்ரா பகுதியில் குடியல் மற்றும் சனோ எனும் ஊர்களுக்கு நடுவே மஹாகாளி ஏரியின் கரையில் இந்த மஹாகாளி கோயில்அமைந்துள்ளது.
யுகங்கள் மற்றும் மாற்றங்களின் தெய்வமான காளி தேவிக்காக இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்காலங்களில் ஏராளமான பக்தர்கள் இங்கு திரள்கின்றனர்.