நால்தேஹ்ரா கோல்ஃப் மைதானத்திற்கு மத்தியில் அமைந்துள்ள இந்த மாஹுநாக் கோயில் கடல் மட்டத்திலிருந்து 1830 மீ உயரத்தில் உள்ளது. இந்த கோயில் சூரியனின் புத்திரனான மாஹுநாக் என்ற பெயரையும் கொண்ட கர்ணனுக்காக நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.
இந்த கோயிலின் தெய்வத்திற்கு பக்தர்களின் சட்டப்பிரச்சினைகள் மற்றும் குடும்பத்தகராறுகள் போன்றவற்றை தீர்த்து வைக்கும் வல்லமை கொண்டதாக உள்ளூர் நம்பிக்கைகள் நிலவுகின்றன.
பஹாரி பாணி கட்டிடக்கலை அம்சங்களுடன் இந்த கோயில் காட்சியளிக்கிறது. ஹிமாலய மலையடைவாரத்தில் வசிக்கும் மக்கள் நாகரிகத்துடன் தொடர்புடையதே பஹாரி பாணி என்பதும் குறிப்பிடத்தக்கது.
வரலாற்றுக்குறிப்புகளின்படி இக்கோயில் 1664ம் ஆண்டில் ஷியாம் சென் எனும் மன்னரால் கட்டப்பட்டிருக்கவேண்டும் என்று தெரிய வருகிறது. இவர் கர்ணனின் தீவிர பக்தர் என்றும் சொல்லப்படுகிறது.
ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் இக்கோயிலுக்கு விஜயம் செய்கின்றனர். வருடாவருடம் மகர சங்கராந்தியின்போது ஒரு திருவிழாவும் இங்கு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
அச்சமயம் யாத்ரீகர்களும் பக்தர்களும் திரளாக இக்கோயிலில் குழுமுகின்றனர். கர்சோக் பள்ளத்தாக்கு மற்றும் இமலயமலையின் அழகுக்காட்சிகளை இக்கோயிலிலிருந்து நன்றாக பார்த்து ரசிக்க முடிவது மற்றொரு சிறப்பம்சமாகும்.