உலகிலேயே மிகப்பழமையான கோல்ஃப் மைதானங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த நால்தேஹ்ரா கோல்ஃப் கோர்ஸ் 1920ம் ஆண்டில் இந்திய வைசிராய் கர்சன் பிரபுவால் உருவாக்கப்பட்டிருக்கிறது.
நால்தேஹ்ரா பிரதேசத்தின் இயற்கை வனப்பில் பெரிது கவரப்பட்டிருந்த அவர் அடிக்கடி இந்த ஸ்தலத்திற்கு வந்து ஓய்வெடுத்ததாக சொல்லப்படுகிறது.
இந்த கோல்ஃப் மைதானம் தற்போது ஹிமாச்சல் சுற்றுலாத்துறையின் பராமரிப்பில் உள்ளது. 18 குழிகள் கொண்ட கோல்ஃப் மைதானத்தை கொண்ட இது இந்திய மலைப்பகுதிகளில் உள்ள மிகச்சிறந்த கோல்ஃப் கிளப்களில் ஒன்றாக பிரசித்தி பெற்றுள்ளது.
மேலும் இது நாட்டின் பிற பகுதியில் உள்ள முக்கியமான கோல்ஃப் கிளப்களான சிம்லா ARTRAC கோல்ஃப் கிளப், டெல்லி BSF கோல்ஃப் கிளப், சண்டிகர் கோல்ஃப் கிளப் மற்றும் டெல்லி ஏர் ஃபோர்ஸ் கோல்ஃப் கிளப் ஆகியவற்றுடன் ஒன்றிணைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. பருவநிலையை பொறுத்து ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை இந்த கோல்ஃப் கிளப் திறக்கப்படுகிறது.