நிம்ச்சிக்கும் சம்த்ருப்சேவுக்கும் இடையில் இந்த பாறைத்தோட்டம் அமைந்துள்ளது. தாவரங்கள், மலர்கள், மரங்கள் நிறைந்துள்ள இத்தோட்டத்தில் நிறைய அமரும் இடங்களும், ஓய்வெடுக்கும் இடங்களும், ஒரு உணவகமும் உள்ளது. இங்கு வந்து ஓய்வெடுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு தேநீரும், காபியும் இவ்வுணவகத்தில் கிடைக்கும்.