Share This Story
 

நந்திக் குன்று - வரலாறு விட்டுச்சென்ற சொர்க்கம்

பெங்களூரிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவிலும், கடல் மட்டத்திலிருந்து 4851 அடி உயரத்திலும் இயற்கையின் வரப்பிரசாதமாய் நந்திக் குன்று அமைந்துள்ளது. சிக்கபல்லப்பூர் மாவட்டத்தில் இருக்கும் நந்திக் குன்று பெங்களூர் பன்னாட்டு விமான நிலையத்திற்கு அருகிலேயே இருப்பதால்  பயணிகள் எளிதாக இந்த சுற்றுலாத் தலத்தை அடையலாம்.

நந்திக் குன்று புகைப்படங்கள் - பசுமையின் பிடியில் நீண்டு செல்லும் படிக்கட்டுகள்

வரலாற்றோடு பிணைந்திருக்கும் அழகு

நந்திக் குன்று சுவையான வரலாற்று நிகழ்வுகளை கொண்டதோடு,  மரபு சார்ந்த மர்மங்களுக்கும் உறைவிடமாய் திகழ்கிறது. சிலர்,  நந்திக் குன்று பார்ப்பதற்கு தூங்கும் எருது போல் காட்சியளிப்பதால் அதற்கு அப்பெயர் வந்ததாக கூறுவர்.

சோழப் பேரரசின் ஆளுகையில் நந்திக் குன்று இருந்த போது  அனந்த கிரி என்ற பெயருடன் அது விளங்கியதாக சொல்லப்படுகிறது. அப்போது நந்திக்குன்றில், சோழ கட்டிட கலைக்கே உரித்தான பாணியில் கோயில்கள் கட்டப்பட்டிருக்கின்றன.

சுதந்திர போராட்ட காலத்தில்  இங்கு நந்தி துர்கா என்ற பெயரில் திப்பு சுல்தானால் கோட்டை ஒன்று கட்டப்பட்டது . எவராலும் அசைக்க முடியாத கோட்டையாக திகழ்ந்த அந்த கோட்டை 1791-ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டது.

நந்திக் குன்றுக்கு வரும் போது திப்பு சுல்தானின் கோடை கால வாசஸ்தலம், திப்புவின் வீழ்ச்சி, அவர் தப்பிச்சென்ற ரகசிய வழி போன்ற இடங்கள் வரலாற்றை நம் கண்முன் கொண்டு வருவதோடு, மறக்க முடியாத அனுபவமாகவும் இருக்கும்.

இவை தவிர கவி வீரபத்திர கோயில், அம்ரிதா சரோவர் ஏரி, தோட்டக்கலை பூங்கா உள்ளிட்ட இடங்களும் பயணிகளின் ரசனைக்கு விருந்தளிக்க கூடியவை. அதே போல் பேராக்ளைடிங், மிதிவண்டி பயணம் போன்றவைகளும் பயணிகளுக்கு பேரனுபவமாக அமையும்.

Click here to type in tamil

அருகில் பயணம்

கர்நாடக மாநிலத்தில்  புதிய சிக்பல்லாபூர் மாவட்டத்தின் தலைநகராக இந்த சிக்பல்லாபூர் விளங்குகிறது. முன்பு கோலார் மாவட்டத்தின் அங்கமாக இருந்த இந்த நகரத்தில் பல சுவாரசியமான சுற்றுலா அம்சங்கள் காணப்படுகின்றன. பெங்களூரிலிருந்து 50 கி.மீ தூரத்தில் உள்ள  சிக்பல்லாபூர் அதன் பெயரிலேயே உள்ள மாவட்ட தலைநகராக
கட்டி சுப்பிரமணிய கோயில் பெங்களூரிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில், தொட்டபல்லப்பூர் நகரத்தில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் முன்னொரு  காலத்தில் புனிதப் பயணம் வரும் யாத்ரிகர்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்கியது.  இப்போதும் இங்கு ஏராளமான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் திரள் திரளாக
மலே மகாதேஸ்வரா குன்று மைசூரிலிருந்து 140 கிலோமீட்டர் தொலைவில், சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள மகாதேஸ்வரா கோயிலும், அதை சூழ்ந்து காணப்படும் அடர்ந்த காடுகளும் உங்கள் உடலையும், உள்ளத்தையும் உற்சாகமூட்டி பயணத்தை இன்பமயமாக மாற்றும். காடுகளுக்கு மத்தியில் ஒரு கோயில் மலே மகாதேஸ்வரா குன்றின்
இந்தியாவில் பாரம்பரிய நடனங்களுக்காகவே தொடங்கப்பட்ட முதல் நவீன குருகுலம் நிருத்ய கிராமமே ஆகும். இந்த தனித்துவமான நாட்டிய கிராமம் பெங்களூரிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில், ஹெசர்கட்டாவுக்கு அருகில் அமைந்துள்ளது. நிருத்ய கிராமத்தை நிர்மாணித்தவர் இந்தியாவின் பிரபல ஒடிசி கலைஞர் ப்ரோத்திமா பேடி ஆவார். பாரதத்தின்