90 ஏக்ரா பரப்பளவில் பிரம்மாண்டமாய் அமைந்திருக்கும் திப்பு சுல்தான் கோட்டை உருவத்திலும், வடிவத்திலும் ஸ்ரீரங்கபட்டினத்தில்லுள்ள தரியா தவ்லத் அரண்மனையை நினைவு கூர்வன. இந்தக் கோட்டை திப்புவின் சிக்கபல்லப்பூர் முன்னோர்களால் கட்ட ஆரம்பிக்கப்பட்டு 1791-ஆம் ஆண்டு திப்பு சுல்தானால் முடிக்கப்பட்டது. இந்த இடம் தான் திப்பு சுல்தானின் கோடை கால வாசஸ்தலமாக இருந்து வந்தது.
கோட்டையின் தூண்களிலும், நுழைவாயில்களிலும் காணப்படும் அழகிய வேலைப்பாடுகள் திப்பு சுல்தான் காலத்தின் கட்டிடக் கலை சிறப்பினை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. அதனுடைய உட்சுவர்களில் கவின்மிகு ஓவியங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன.
கோட்டையின் ஐந்து நுழைவாயில்களிலும் காணப்படும் ஸ்தூபிகள் பார்போரை கவர்ந்திழுக்கும் தோற்றம் கொண்டவை. திப்புவின் அரண்மனைக்குள் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.