நந்திக் குன்றின் உச்சியில் உள்ள 600 மீட்டர் உயர செங்குத்தான பாறைதான் திப்புவின் வீழ்ச்சி என்று அழைக்கப்படுகிறது. குற்றவாளிகளை இந்த பாறையிலிருந்து கீழே தள்ளி விட்டு மரண தண்டனை கொடுக்கும் வழக்கம் திப்பு சுல்தான் காலத்தில் நடைமுறையில் இருந்ததாக வரலாறு கூறுகிறது.
இந்த பாறையை இரவு நேரத்தில் அணுகினால் மரங்களின் சரசரப்பு ஓசையை கேட்கலாம். அந்த ஓசை திப்புவின் வீழ்ச்சியிலிருந்து தள்ளிவிடப்பட்ட கைதிகளின் அழுகை குரல் என்று அப்பகுதி மக்கள் நம்பி வருகின்றனர்.