நஞ்சன்கூடுக்கு வரும் பயணிகள் இந்த ஸ்ரீ ராகவேந்திரஸ்வாமி மடத்துக்கும் நேரம் இருந்தால் விஜயம் செய்யலாம். இது பிரதீக சன்னிதி என்றும் அழைக்கப்படுகிறது.
வழக்கமாக காணப்படும் பிருந்தாவனத்துக்கு பதிலாக இங்கு ஸ்ரீ ராகவேந்திரஸ்வாமியின் சிலையையே இந்த மடத்தில் பார்க்க முடிகிறது. ஸ்ரீ ராகவேந்திரஸ்வாமியின் ஒரே ஒரு சிலை வடிவம் இதுதான் என்றும் சொல்லப்படுகிறது.
ஸ்ரீ மடாச்சாரியாரின் ஜீவசமாதிக்குப்பின் ஷீ ராயர மடத்தை சேர்ந்த ஷீ சுஜானந்த தீர்த்தரு இந்த மடத்தின் பொறுப்பில் 1836 -61ம் ஆண்டுகளில் இருந்துள்ளார்.
பக்தர்கள் இங்குள்ள பஞ்ச பிருந்தாவனத்தையும் பார்க்கலாம். இங்கு சுஜானேந்திர தீர்த்தர், சுபோதேந்திர தீர்த்தர், சுப்ரஜனேந்திர தீர்த்தர், சுஜ்னனேந்திர தீர்த்தர் மற்றும் சுக்ருதீந்திர தீர்த்தர் ஆகிய ஐந்து மடாதிபதிகளின் சமாதிகள் உள்ளன.