இந்து மதத்தில் காலம் மற்றும் மாற்றத்தின் கடவுளாக சித்தரிக்கப்டும் காளி தேவியின் கோவிலான மகாமாயா கோவில், ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்திலுள்ள கச்சேரி என்ற புகழ் பெற்ற சுற்றுலாதலத்தில் உள்ளது.
சுந்தர்நகரைச் சேர்ந்த அரசரால் அவருடைய அரண்மனைக்குள் கட்டப்பட்டுள்ள இந்த கோவில், கோட்டையைப் போன்ற கட்டிட வடிவமைப்பைப் பெற்றுள்ளது.
கடல் மட்டத்திலிருந்து 1810 மீ உயரத்தில் அமைந்துள்ள இந்த கோவிலின் நுழைவாயில் வெள்ளி, மரம் மற்றும் அலுமினிய அட்டைகளால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலின் அமைவிடம் தியானம் செய்யவும், ஓய்வெடுக்கவும் ஏற்ற வகையில் அமைந்துள்ளது.