ஆப்கனியரான ஜமால் கான் என்பவரால், முகமது பின் துக்ளக்கின் ஆட்சியில் கட்டப்பட்ட சோர் கும்பத் நான்கு தூண்களைக் கொண்ட சதுர வடிவிலான கட்டிடமாகும்.
பிற்காலத்தில் திருடர்களுக்கும், கொள்ளையர்களுக்கும் புகழிடமாக விளங்கி இவ்விடத்தை திருடர் கும்பாது எனப்பொருள்படும் வண்ணம் சோர் கும்பத் என அழைக்கிறார்கள். ஊரின் விளம்பரப்பலகை என்றழைக்கப்படும் இவ்விடம் முக்கியமான சுற்றுலா தளமாகும்.