கிபி 1589ல் உடைக்கப்பட்ட கட்டிடத்தின் பாகங்களால் ஷா குய்லி கான் என்பவரால் இந்த நுழைவாயில் கட்டப்பட்டது. ஒரு பூங்காவின் பிரதான நுழைவு வாயிலாக திகழும் இவ்வாயிலுடன் மேலும் மூன்று நுழைவுவாயில்களும் அப்பூங்காவில் இருக்கின்றன.
சிகப்பு மற்றும் சாம்பல் நிற கற்களால் கட்டப்பட்ட எண்வடிவ கல்லறை ஒன்றும் இவ்வளாகத்தில் அமைந்துள்ளது. குய்லி கானின் கல்லறையான இது ஆராம்-இ-கெளசா என்றழைக்கப்படுகிறது.