மிகவும் பிரசித்தி பெற்ற இந்த முக்திதம் கோயில் நாசிக் நகரின் மையத்திலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ளது. வெண்ணிற பளிங்குக் கற்களால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கோயில் ஷீ ஜயராம்பாய் பைட்கோ என்பவரால் கட்டப்பட்ட்து.
இந்த புனிதக்கோயிலானது மிக புதுமையான முறையில் வேறெந்த பாரம்பரிய கட்டடக் கலை நுட்பங்களையும் ஒட்டியில்லாமல் வடிவமைக்கப் பட்டுள்ளது. இதனுள் பஹவத் கீதையின் 18 அத்தியாயங்களும் பொறிக்கப் பட்டுள்ளன. இந்திய புராணிக ஐதீகத்தின் 12 ஜோதிலிங்க கோட்பாட்டின் அடையாளமாக இந்த கோயில் விளங்குகிறது.