நாதத்துவாராவின் முக்கியமான சுற்றுலாத் தலமான துவார்கதீஷ் கோயில் ராஜஸ்தானின் கன்க்ரோலி கிராமத்தில் அமைந்திருக்கிறது. இந்தக் கோயில் வைஷ்ணவ மற்றும் வல்லபாச்சார்யா பிரிவுகளை சேர்ந்தர்வர்களுக்கு சொந்தமானது.
இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் கிருஷ்ண பகவானின் செந்நிற கல்லாலான விக்ரகம் மதுரா நகரிலிருந்து கொண்டுவரப்பட்டது. மேலும் இந்தக் கோயிலுக்கு வெகு அருகில் உள்ள நவ்சாவ்கி அணை அல்லது கன்க்ரோலி அணை பறவை காதலர்களின் சொர்க பூமியாக திகழ்ந்து வருகிறது.