அஸ்ஸாம் மாநிலம், பல்வகை தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் கருவூலமாகத் திகழ்கிறது. இயந்திரமயமாக்கல் மற்றும் நவீனமயமாக்கலுக்கு நடுவிலும் வாழ்க்கையின் உண்மையான சாரம் மற்றும் வளமான சுற்றுச்சூழல் ஆகியவற்றை எங்கெங்கிலும் காண முடிகிறது.
அநேகமாக மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஒரு தேசியப் பூங்காவோ அல்லது அருகி வரும் விலங்குகளைப் பாதுகாப்பதற்கென உருவாக்கப்பட்டுள்ள ஒரு வனவிலங்குகள் சரணாலயமோ அமையப்பெற்றுள்ளது.
பல்வேறு அரிய வகை தாவரங்கள் மற்றும் மரங்கள் வளர்ந்திருக்கும் அஸ்ஸாமின் வனவிலங்குகள் சரணாலயங்கள் தாவர வளத்திலும் சிறந்து விளங்குகின்றன.
இன்று அஸ்ஸாம் என்றாலே அது காசிரங்கா தேசியப் பூங்கா தான் என்னும் அளவுக்கு இப்பூங்கா மிகவும் பிரபலமாக உள்ளது. இப்பூங்கா, அருகி வரும் விலங்கினமான ஒற்றைக் கொம்புடைய காண்டா மிருகத்தை அதிக எண்ணிக்கையில் கொண்டிருக்கிறது.
அஸ்ஸாமின் மாநில விலங்கான ஒற்றைக் கொம்பு காண்டா மிருகம், மேலும் பல வனவிலங்கு சரணாலயங்களிலும் காணப்படுகிறது. இந்த வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் தேசியப் பூங்காக்களுக்குச் செல்லாமல் அஸ்ஸாம் செல்லும் பயணம் நிறைவடைவதில்லை.
இவற்றுள் சிலவற்றிலாவது ஒன்றிரண்டு நாட்களை கழிக்கும் வண்ணம் சுற்றுலாப் பயணிகள் தங்கள் பயண நிரலை திட்டமிட்டுக் கொள்ளலாம்.