புராச்சாபோரி வனவிலங்கு சரணாலயம் பிரம்மபுத்ரா நதியின் தெற்கு கரையோரத்தில் சுமார் 44.06 சதுர கி.மீ. பரப்பளவுடன் காணப்படுகிறது. சோனித்பூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இது, லாவ்கோவா வனவிலங்குகள் சரணாலயத்துடன் பகிர்ந்து கொண்டிருக்கும் வளமான சுற்றுச்சூழல் மண்டலத்துக்காக பெரிதும் அறியப்படுகிறது.
சொல்லப்போனால், இவ்விரண்டு சரணாலயங்கள் மட்டுமே இரு பெயர்களில் வழங்கப்படும் ஓரே அமைப்பு என்ற பெருமையைப் பெற்றுள்ளன.இந்த சரணாலயம் ஈரமான வண்டல் மேய்ச்சல்வெளிகளில் ஆங்காங்கே தென்படும் பச்சை மரங்களைக் கொண்ட காடுகளுடன் காட்சியளிக்கிறது.
வங்காள ஃப்ளோரிகன் மற்றும் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் புராச்சாபோரி வனவிலங்கு சரணாலயத்தின் சிறப்பு அடையாளங்களாகக் கருதப்படுகின்றன.
புலிகள், காட்டெருமைகள், சிறுத்தைகள், காட்டுப்பன்றிகள் மற்றும் சிறு மான்கள் போன்ற விலங்குகளையும் சுற்றுலாப் பயணிகள் இங்கு காணலாம். யானைகள் எப்போதாவது கண்ணில் தென்படுகின்றன.
புராச்சாபோரி வனவிலங்கு சரணாலயத்துக்கு அருகாமையில் உள்ள நகரம், இதிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேஸ்பூர் நகரமே ஆகும்.
குவாஹத்தி, இச்சரணாலயத்திலிருந்து சுமார் 160-200 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்கு வருவதற்கு உகந்த காலகட்டம் நவம்பர் மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடைப்பட்ட காலமே ஆகும்.