சக்ரஷீலா வனவிலங்குகள் சரணாலயம், தங்க நிற கரடிக்குரங்குகளின் பாதுகாக்கப்பட்ட இரண்டாவது வசிப்பிடமாகத் திகழ்கிறது. முன்பு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக இருந்த சக்ரஷீலா 1994 ஆம் ஆண்டில் வனவிலங்குகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது சுமார் 45.50 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது. இச்சரணாலயம், அஸ்ஸாமின் தூப்ரி மற்றும் கொக்ராஜ்ஹர் ஆகிய இரு மாவட்டங்களின் அதிகார வரம்புக்குள் அடங்குகிறது.
சக்ரஷீலா வனவிலங்குகள் சரணாலயத்தில், சுற்றுலாப் பயணிகள் 14 வித்தியாசமான ஊர்வன வகை பிராணிகள், 60 வகை மீன்கள் மற்றும் 11 வகையான நிலநீர்வாழ் பிராணிகளுடன், சுமார் 273 வகை பறவைகளையும் காணலாம்.
இச்சரணாலயத்தின் இருபுறங்களிலும் அமைந்துள்ள, தீர் பீல் மற்றும் திப்லாய் பீல் என்ற பெயரில் வழங்கப்படும் இரு ஏரிகள் இதன் அழகுக்கு மேலும் அழகூட்டுகின்றன.
இங்கிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொக்ராஜ்ஹர் நகரமே இதற்கு அருகாமையில் அமைந்துள்ள நகரமாகும். லோக்ப்ரியா கோபிநாத் போர்தோலோய் விமான நிலையம் சக்ரஷீலாவிலிருந்து சுமார் 219 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. விமான நிலையத்திலிருந்து நேரடி போக்குவரத்து வசதியும் உள்ளது.