டிக்பாயில் இருந்து 60கிமீ தொலைவில் இந்த பூங்கா அமைந்துள்ளது. 340சதுர கிமீ பரப்பளவில் உள்ள இந்த பூங்கா 1990ல் தேசிய பூங்காவாக அமைந்துள்ளது.
ஏழு பகுதிகளாக உள்ள இந்த பூங்காவில் ஒன்று சதுப்பு நிலமாகவும், மற்றது புல்வெளியாகும், அடர்ந்த காடுகளாகவும் உள்ளன. நீர் விலங்குகளும், வனவிலங்குகள் என ஏராளமான உயிரினங்கள் இங்கு காணப்படும் இந்த பூங்கா பிரம்மபுத்திராவும் லோஹித் நடியும் சங்கமிக்கும் இடத்தில் உள்ளது.
அரிதான விலங்குகளான காட்டு குதிரைகள், வெள்ளை இறக்கைமர வாத்துகள் ஆகியவை இங்கு காணப்படுகின்றன. வேங்கைகள், யானைகள், ச்லோ லோரிஸ், சம்பார், ஆசிய எருமைகள், கங்கை டால்பின்கள், லங்கூர்கள், இந்திய காட்டு நாய்கள், பெங்கால்புலிகள், ஆகியவையும் இங்கு உள்ளன. புலம்பெயர் பறவைகளான பெங்கால் ஃப்ளோரிகான், கொக்குகள் ஆகியவை காணப்படுகின்றன.