சோனாய் ருபாய் வனவிலங்கு சரணாலயம் இமயமலையின் அடிவாரத்தில் சோனித்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சுமார் 200 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ள இந்த சரணாலயம், கண்கவர் இயற்கைக் காட்சிகளோடு ஏராளமான வனவிலங்குகளையும் கொண்டுள்ளது.
சோனாய் ருபாய் வனவிலங்கு சரணாலயத்தில் சுற்றுலாப் பயணிகள், புலிகள், குறுரோமம் கொண்ட பூனைகள், யானைகள், காட்டெருதுகள், குரைக்கும் மான்கள் மற்றும் சிறு மான்கள் போன்ற விலங்கினங்களைக் காணலாம்.
வனவிலங்குகள் மட்டுமல்லாது, வளமான தாவர வகைகளின் இருப்பிடமாகவும் இது உள்ளது. ஏராளமான தாவர வகைகளை இங்கு காண முடிகிறது. இந்த வனவிலங்குகள் சரணாலயத்தில் ஏகப்பட்ட மலைப் பறவைகளும் தென்படுகின்றன.
சுமார் 52 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேஸ்பூர் மற்றும் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேக்கியாஜுலு ஆகியவை சோனாய் ருபாய் வனவிலங்குகள் சரணாலயத்திற்கு அருகாமையில் உள்ள நகரங்கள் ஆகும்.
இச்சரணாலயத்திற்கு அருகாமையில் உள்ள விமான நிலையம் தேஸ்பூர் விமான நிலையமாக இருப்பினும், குவாஹத்தி வரை விமானத்தில் பயணித்து பின் அங்கிருந்து சாலை மார்க்கமாக தேஸ்பூரை அடையும்படி அறிவுறுத்தப்படுகிறது. நவம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான காலகட்டமே இங்கு செல்வதற்கு மிக உகந்ததாகக் கருதப்படுகிறது.