அழகிய நீர் நிலையான நௌகுசியாடல் ஏரி கடல் மட்டத்திலிருந்து 3996 அடி உயரத்தில் உள்ளது. நௌகுசியாடல் என்பதற்கு ஒன்பது மூளைகள் உள்ள ஏரி என்று அர்த்தமாகும்.
இந்த ஏரியின் ஒன்பது மூளைகளையும் ஒரே நேரத்தில் பார்ப்பவருக்கு நிர்வாணம் கிட்டும் என்ற நம்பிக்கையுண்டு. இந்த ஏரிக்கு அடியில் ஊற்று இருப்பதால், இந்த ஏரியில் வருடம் முழுவதும் தண்ணீர் இருக்கும்.
இந்த இடத்தில் பல வகையான பறவைகள் இனம் இருப்பதால் இங்கு வருபவர்கள் அதனை கண்டு ரசிக்கலாம். மேலும் ஏரியில் படகு சவாரி, நீச்சல் மற்றும் மீன் பிடித்தல் போன்றவைகளில் ஈடுபடலாம்.
இது போக மலை ஏறுதல் மற்றும் பாராகிளைடிங் போன்ற தீர விளையாட்டுக்களிலும் ஈடுபட்டு பொழுதை இன்பமயமாக கழிக்கலாம். இயற்கை அழகு கொட்டி கிடக்கும் இந்த ஏரியை சுற்றி நடை பயணம் மேற்கொண்டால் சுற்றுலாப் பயணிகளுக்கு மன நிம்மதியை அளிக்கும்.