குருத்வாரா மஞ்சி சாஹிப் நவான்சாஹர் என்று அழைக்கப்படும் இந்த குருத்வாரா நவான்ஷாஹர் நகரத்தின் பழமையான குருத்வாராக்களில் ஒன்றாக பிரசித்தி பெற்றுள்ளது.
ஒன்பதாவது சீக்கிய குருவான குரு தேஜ் பஹதூர் சாஹிப்ஜி அவர்களின் நினைவாக கட்டப்பட்டிருக்கிறது. பாபா பகலா சாஹிப் எனும் ஸ்தலத்திலிருந்து கிராத்பூர் சாஹிப் ஸ்தலத்திற்கு பயணம் மேற்கொண்டபோது வழியில் இந்த ஸ்தலத்தில் அவர் தங்கியிருந்ததாக சொல்லப்படுகிறது. அவருடன் மாதா குஜ்ரி ஜி, பாய் மதி தாஸ்ஜி மற்றும் பாலகி ராய் ஆகியோர் உடனிருந்துள்ளனர்.