சுபேதார் ஷாமாஸ் கானுக்கு எதிரான போரில் உயிர் நீத்த சீக்கிய வீர்களின் நினைவாக குருத்வாரா ஷாஹீத்கஞ்ச் தல்வண்டி ஜட்டன் கட்டப்பட்டுள்ளது.
அதாவது பெஹ்ராமிலிருந்து ஒரு பெண்ணை கடத்திச் சென்ற சுபேதாரை எதிர்த்த போரிட்ட வீரர்களாக கோத்ரியா சிங், லோத்ரியா சிங், ரூப் கௌர் ஆகியோர் அறியப்படுகிறார்கள். இந்த சீக்கிய வீரர்கள் எரியூட்டப்பட்ட இடத்தில் இந்த நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டுள்ளது.
இங்கு சீக்கிய குருக்களின் பிறந்த தினத்தன்று எண்ணற்ற விழாக்கள் நடத்தப்படுகின்றன. இவ்விழாக்களுக்கு நாடு முழுவதுமிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.