சூரஜ் குண்ட் ரஹோன் எனப்படும் இந்த பிரசித்தமான ஆன்மீக யாத்ரீக ஸ்தலம் ரஹோன் நகரத்தில் அமைந்துள்ளது. இது நகர்ப்பகுதியிலிருந்து சுமார் 1 கி.மீ வெளியே உள்ளது.
ஸ்ரீ ராம் சந்தர்ஜி அவர்களோடு தொடர்புடைய தீர்த்தக்குளங்கள் இந்த ஸ்தலத்தில் அமைந்துள்ளன. பதான் வம்சத்தினரின் ஆட்சியின்போது பவா ஔகார் என்பவர் இந்த வளாகத்தை எழுப்பி இதற்கு சூரஜ் குண்ட் என்று பெயரிட்டதாக கூறப்படுகிறது. ரஹோன் நகரம் நவான்ஷாஹர் நகரத்திலிருந்து 10 கி.மீ தூரத்தில் உள்ளது.