மத்திய பிரதேசத்தில், நீமுச் மற்றும் மண்ட்சார் மாநிலத்திற்கு வடக்கே அமைந்துள்ள காந்தி சாகர் சரணாலயம், இயற்கை அழகை அள்ளித் தரும் ஒரு அற்புதமான இடம். 1974 ஆம் ஆண்டு அடையாளம் காணப்பட்ட காந்தி சாகர் சரணாலயம், 1983 ஆம் ஆண்டு விரிவுபடுத்தப்பட்டது.
இப்பொழுது, இந்த சரணாலயத்தின் பரப்பளவு 368.82 சதுர கிலோமீட்டரையும் விட அதிகமாக இருக்கிறதாம். எழில் கொஞ்சம் இயற்கை அழகு, நம் மனதிற்கு அமைதியையும், நிம்மதியையும் தரும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
இந்தச் சரணாலயம் பரந்து விரிந்து ராஜஸ்தான் மாநிலத்தை தழுவி நிற்கிறது. காந்தி சாகர் சரணாலயத்தின் குறுக்கே ஓடும் சாம்பல் ஆறு, இச்சரணாலயத்தை இரண்டாகப் பிரிக்கிறது.
மேற்கே இருக்கும் பாகம் நீமுச் மாவட்டத்திலும், கிழக்கே இருக்கும் பாகம் மண்ட்சார் மாவட்டத்திலும் இருக்கிறது. இயற்கை அழகை ரசிக்க விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்தச் சரணாலயம் ஒரு வரப்பிரசாதம்.