பரா ஷஹீத் தர்க்கா என்றழைக்கப்படும் இந்த தர்க்கா சமாதிக்கோயில் நெல்லூர் மாவட்டத்தில் சூலூர்பேட் என்ற இடத்தில் உள்ளது. ஷாஹிதுகள் எனப்படும் 12 தியாகிகளை கௌரவிக்கும்விதமாக இந்த தர்க்கா உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த தர்க்காவில் வேண்டிக்கொள்ளும் ஒவ்வொரு பக்தரின் வேண்டுதலும் நிறைவேற்றப்படும் என்பதாக ஐதீக நம்பிக்கை நிலவி வருகிறது. முகர்ரம் திருநாள் இந்த தர்க்காவில் முக்கியமான திருவிழா நாளாகும். அச்சமயம் 3 நாட்களுக்கு தொடர்ந்து ‘ரொட்டேலா பண்டுகா’ என்ற பெயரில் திருவிழாச்சடங்குகள் இந்த தர்க்காவில் நிகழ்த்தப்படுகின்றன.
இந்த பரா ஷஹீத் தர்க்கா கடலுக்கு வெகு அருகில் அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. கடற்கரையிலிருந்து 5 கி.மீ தூரத்திலேயே இந்த தர்க்கா உள்ளது. அமாவாசை நாளில் இந்த தர்க்காவுக்கு விஜயம் செய்து இரவுப்பொழுதையும் இங்கேயே கழிப்பது விசேஷமான சடங்காக பக்தர்கள் மத்தியில் பின்பற்றப்பட்டு வருகிறது.