பட்டூரு எனப்படும் இந்த கிராமம் இங்கு கிடைக்கும் கைத்தறிச்சேலைகள் மற்றும் கைவினை கலைப்பொருட்களுக்காக புகழ் பெற்று விளங்குகிறது. கோவூர், தமரமடுகு மற்றும் கொடவாலூர் ஆகிய மூன்று ஊர்கள் அமைந்திருக்கும் ஒரு முக்கோண அமைப்பின் உட்பகுதியில் இந்த பட்டூரு எனும் கிராமம் அமைந்துள்ளது.
இந்த கிராமம் திக்கண்ண சோமயாஜி எனும் சிறந்த தெலுங்கு கவிஞர் பிறந்த இடம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. தம் வாழ்நாளை பெரும்பாலும் இந்த கிராமத்திலேயே கழித்து இங்கேயே இந்த கவிஞர் இறந்துள்ளார். கோவூர் என்ற இடத்திலிருந்து 4 கி.மீ தூரத்திலிருந்தும் நெல்லூர் நகரத்திலிருந்து 10 கி.மீ தூரத்திலும் இந்த பட்டூரு கிராமம் உள்ளது.
ஹைதராபாத் நகரத்துக்கும் இந்த கிராமத்துக்கும் இடையேயான தூரம் 354 கி.மீ என்பதும் குறிப்பிடத்தக்கது. நெல்லூருக்கு விஜயம் செய்யும் பயணிகள் இந்த கிராமத்துக்கும் வந்து தேவையான புடவைகள் மற்றும் கைவினைப்பொருட்களை வாங்கிச்செல்லலாம்.